Saturday, December 31, 2011

உன்னில் பிடித்தது....


முதன் முதலாய்
பார்க்கும் போது
உன்னை எனக்கு
பிடித்திருந்தது…
நான் பிறரிடம்
பேசும் போது
உன் பொறாமை
பிடித்திருந்தது…
எப்பொழுதும் என்னுடனே
இருக்கும் போது
உன் நேசம்
பிடித்திருந்தது…
நமக்குள் சண்டை வந்தாலும்
முதலில் நீ பேசும் போது
உன் பாசம்
பிடித்திருந்தது…
நீ எனக்கு தண்டனை
கொடுக்கும் போது
உன் தைரியம்
பிடித்திருந்தது…
உனக்கு நான் தண்டனை
கொடுக்கும் போது
உன் மெளனம்
பிடித்திருந்தது….

No comments:

Post a Comment